கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

Date:

இலங்கை பல்கலைக்கழக கட்டமைப்பில் மொத்தமாக 11,900 விரிவுரையாளர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது 6,000 இற்கும் குறைந்த விரிவுரையாளர்களே இருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் பணிபுரியும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் 6,300 ஆகக் குறைவடைந்ததாகவும் கடந்த 7 மாதங்களில் மேலும் 500 முதல் 600 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டடுள்ளது.

விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது அரச பல்கலைக்கழகங்களுக்கு மாத்திரமன்றி நாட்டிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பல்கலைக்கழகத்தில் 50 வீத வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், 2022ஆம் ஆண்டு புதிய மாணவர்களை இணைத்ததன் பின்னர் இந்த எண்ணிக்கை கணக்கிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...