கந்தானை இரசாயன தொழிற்சாலையில் தீ பரவல்: 85 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி

Date:

கந்தானை இரசாயன தொழிற்சாலையில்  ஏற்பட்ட தீ விபத்தினால் வெளியேறிய புகை காரணமாக பாதிக்கப்பட்ட 85 மாணவிகள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தானை, தேவாலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த தொழிற்சாலையானது கந்தானை புனித செபஸ்தியார் பெண்கள் கல்லூரிக்கு அருகாமையில்  அமைந்துள்ளதால் தீ விபத்தின் போது வெளியேறிய புகை காரணமாக  85 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 85 மாணவிகளும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  ராகம போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கினறன.

கந்தானை இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...