சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை: இ.போ.ச தீர்மானம்

Date:

சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

விபத்துகளை தடுப்பதற்கும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கோளோளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பரிசோதனை புத்தகமொன்று அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் சம்பவித்த விபத்துகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை பிரிவு முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இதுவரை பதிவு செய்யப்பட விபத்துகளில் 218 விபத்துகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் இடம்பெற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...