சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை: இ.போ.ச தீர்மானம்

Date:

சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

விபத்துகளை தடுப்பதற்கும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கோளோளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பரிசோதனை புத்தகமொன்று அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் சம்பவித்த விபத்துகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை பிரிவு முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இதுவரை பதிவு செய்யப்பட விபத்துகளில் 218 விபத்துகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் இடம்பெற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...