‘ஜனாதிபதியாக பதவி வகிக்க தேவையான அனுபவம் என்னிடம் உள்ளது’

Date:

இலங்கையின் ஜனாதிபதியாக மீண்டுமொரு தடவை பதவியில் இருப்பேன் என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்கு பின் வெளிநாடுகளுடன் நல்லுறவைப் பேணி, முழு உலகையும் வெற்றிகொண்டது தமது ஆட்சியில்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

”வெளிநாடுகளுடன் இருந்த சுமூகமற்ற உறவுகளை மீள புதுபித்து வலுப்படுத்தியது என ஆட்சிக்காலத்தில்தான். நாட்டுக்கு நன்மை பயக்கும் பல உடன்படிக்கைகளையும் கைச்சாத்திட நடவடிக்கைகளை எடுத்திருந்தேன்.

தற்போது தொழிலதிபர்கள் மகிழ்ச்சியாக இல்லை. அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை. மீனவர்களோ, பொதுமக்களோ மகிழ்ச்சியாக இல்லை. பொருளாதார ரீதியாக மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இப்போதெல்லாம், பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமாக உள்ளது. இந்தப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் தேவை என்பதை நாங்கள் உணர்கிறோம்.

நாம் அதை செய்ய முடியும். ஒரு கட்சி என்ற ரீதியில் அவர்களுக்கான தீர்வுகள் எங்களிடம் உள்ளன. போதைப்பொருளை முற்றாக பாடசாலைகளில் இருந்து ஒழிப்பது கட்டாயம். இது மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

ஒருமுறை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் என்ற வகையில், முந்தைய அனுபவங்களுடன் மீண்டும் பதவி வகிப்பதற்கு எனக்கு எந்த சிரமமும் இல்லை“ என தமது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...