பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு விசேட பாராட்டு நிகழ்வு

Date:

 பாணந்துறை கோட்ட மட்ட தமிழ் மொழிமூல பாடசாலைகள் மற்றும் பிலியந்தலை கோட்ட மட்ட பாடசாலையிலிருந்தும் 2021 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான  31 மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் விஷேட சின்னம் வழங்கும் வைபவம் நேற்று (27) பாணந்துறை Zerendib Grand வரவேற்பு மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பாணந்துறை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் ஆசிரியை திருமதி. ரஸானா ஹஜ்ஜுல் அக்பர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியதுடன் அவர் ஒரு தாயாக, மனைவியாக மற்றும் செயற்பாட்டாளராக செய்த சமூக பங்களிப்புக்காக நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களால் விஷேட உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் கௌரவ அதிதிகளாக பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரி, அல்பஹ்ரியா மத்திய கல்லூரி, அல் இல்மா முஸ்லிம் வித்தியாலய, ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்கேற்றதுடன் விஷேட உரைகளையும் நிகழ்த்தினார்கள்.
நிகழ்வில் பாணந்துறை பிரதேச தமிழ்மொழி மூல அரச பாடசாலைகளிலிருந்து 2021 GCE (A/L) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழகம் தெரிவாகிய
ஜீலான் மத்திய கல்லூரி-16
தொட்டவத்தை அல்பஹ்ரியா மத்திய கல்லூரி-09
எலுவில அல்- அலவிய்யா முஸ்லிம் வித்தியாலயம்- 02
பிலியந்தலை கோட்ட மட்ட பாடசாலையான மொறட்டுவ- எகடஉயன அல்-அறபாத் முஸ்லிம் வித்தியாலயம்-04 மாணவர்கள் என மொத்தமாக 31 மாணவர்கள் அதிதிகளினால் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...