பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பற்றாக்குறை: 50% வெற்றிடம்!

Date:

இந்நாட்டிலுள்ள சுமார் 50% பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 12,992 இருக்க வேண்டியிருந்தாலும், தற்போது 6,548 விரிவுரையாளர்களே பணிபுரிந்து வருவதாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், கல்விசாரா பணியாளர்களிலும் இந்த நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளதால் இதனைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இந்நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சிக்கலாக மாறியுள்ளதாகவும், குறைந்தபட்சம் 1,000 விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...