பஸ் ஜன்னலிலிருந்து தலையை வெளியில் வைத்து பயணித்த மாணவன் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு!

Date:

ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸல பகுதியில் பஸ்ஸில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்து சென்ற போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள்தாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பௌத்த அறநெறி பாடசாலை கல்விப் பயணத்திற்காக நேற்று மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் குறித்த மாணவர் பயணித்துள்ளார். இதன்போது, பஸ்ஸின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மாணவன், ஜன்னலிலிருந்து தலையை வெளியில் வைத்து சென்றுள்ளார். இதன்போது, மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...