பிரபல பாடகி உமாரா தேசிய கீதத்தை தவறான முறையில் பாடியமை உறுதி செய்யப்பட்டது!

Date:

பாடகி உமாரா சிங்ஹவன்ச தேசிய கீதத்தை தவறான முறையிலேயே பாடியுள்ளதாக  விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது பாடகி உமாரா சிங்ஹவன்ச தேசிய கீதத்தில் “மாதா” என்பதற்கு பதிலாக “மஹதா” என்று பாடியதாக குற்றம் சுமத்தப்பட்டது .

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

மேற்படி குழுவின் உறுப்பினர்களாக உள்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் விசாரணை அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடகி உமாரா சிங்ஹவன்ச மற்றும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் வாக்குமூலங்களை மேற்படி குழு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் படி, தேசிய கீதத்தின் தொடர்புடைய வசனங்களை நடுத்தர தொனியில் பாட வேண்டும். ஆனால் பாடகி உமாரா அதை தவறாக பாடியிருப்பதையும் விசாரணைக்குழு உறுதி செய்துள்ளது.

மேலும், இதற்கு முன்னர் இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழாவிலும் அவர் தேசிய கீதத்தை “மாதா”விற்கு பதிலாக “மஹதா” என பாடியதாக விசாரணை குழு தகவல் வெளியிட்டுள்ளது.

அதன்போது அவர் ஒரு குழுவுடன் சேர்ந்து தேசிய கீதத்தை பாடியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைக் குழு இது தொடர்பான அறிக்கையை கடந்த 18ஆம் திகதி பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பிரகாரம், பாடகி உமாரா சிங்ஹவன்ச அரசியலமைப்பை மீறி தேசிய கீதத்தை பாடியமை தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசாரணைக்குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...