போர் வீரர்களின் நினைவுத்தூபி ஒன்று தீ வைத்து எரிப்பு: விசாரணைகள் தீவிரம்!

Date:

வாழைச்சேனை ஓட்டமாவடி பாலத்திற்கு அருகில் உள்ள நினைவுத்தூபிக்கு சிலர் தீ வைத்து எரித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தத்தின் போது உயிரிழந்த 187 முஸ்லிம் பிரஜைகள்,  ஆயுதப்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய நினைவத்தூபியே இவ்வாறு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

நினைவுத்தூபிக்கு அருகே சாக்கு மூட்டைகள் தீ வைத்து எரிக்கப்பட்டிருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

தீயை பார்த்த இரு வணிகர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

தீயினால் நினைவுத்தூபியின் கீழ்ப் பகுதியின் இரண்டு பக்கங்களும் கருகிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமே குறிப்பிடத்தக்கது!

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...