தலைமறைவாகியுள்ள பாஸ்ட்டர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர்களான வெண்டி மற்றும் ஜெயலத் பெர்ணாண்டோ ஆகியோர் பௌத்த மஹாநாயக்கர்களை சந்தித்து மன்னிப்பு கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டமைக்காக ஜெரோம் பெர்ணாண்டோ கைது செய்யப்படவிருந்த நிலையில், நாட்டிலிருந்து தப்பி சென்று தலைமறைவாக வசித்து வருகிறார்.
அவர் நாளாந்தம் வீடியோ கோல் ஊடாக தமது பக்தர்களுக்கு ஆராதனைக் கூட்டங்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.