மத்திய வங்கிக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த 10 பேர் பிணையில் விடுதலை

Date:

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பிணை வழங்கப்பட்டதுடன் இந்த குழு அரசு கட்டிடங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் நேற்று காலை பலர் நுழைய முற்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டையில் கடும் பதற்றமான சூழல் நிலவியது.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் கூட்டு சங்கத்தின் உறுப்பினர்களாக தங்களை அடையாளப்படுத்திய குழு, தங்களின் குத்தகை வசதி பிரச்சினைகள் தொடர்பான சலுகைகளை கோரி வந்திருந்தனர்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...