மத்திய வங்கிக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த 10 பேர் பிணையில் விடுதலை

Date:

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பிணை வழங்கப்பட்டதுடன் இந்த குழு அரசு கட்டிடங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் நேற்று காலை பலர் நுழைய முற்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டையில் கடும் பதற்றமான சூழல் நிலவியது.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் கூட்டு சங்கத்தின் உறுப்பினர்களாக தங்களை அடையாளப்படுத்திய குழு, தங்களின் குத்தகை வசதி பிரச்சினைகள் தொடர்பான சலுகைகளை கோரி வந்திருந்தனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...