மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

 மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாத்திரம் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி தடையின்றி மின் விநியோகத்தினை மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இலங்கை மின்சாரசபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்துடன் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், தடையின்றி மின் விநியோகத்தை அமுல்படுத்துவது மற்றும் விவசாயத்திற்குத் தேவையான அதிகபட்ச நீரை உறுதி செய்வது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...