முதியோர், ஊனமுற்றோர்,சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் தொடரும்

Date:

புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் உட்பட 647,683 பேர் தொடர்ந்தும் கொடுப்பனவைப் பெறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களில் 41,119 சிறுநீரக நோயாளிகள், 88,602 ஊனமுற்றோர் மற்றும் 517,962 பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

எதிர்வரும் நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, முதியோர் கொடுப்பனவுகள் தபால் நிலையங்களில் இருந்தும், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படும்.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...