‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டதிற்கு 6.7 மில்.ரூபாயை நன்கொடையாக வழங்கிய கிரிக்கெட் சபை

Date:

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரை நடைபெற்ற 20 போட்டிகளில் 6.7 மில்லியன் ரூபாய் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டதிற்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த போட்டியில் 497 பவுண்டரிகள் , 185 சிக்ஸர்கள் மற்றும் 1802 ஓட்டமற்ற பந்துகளால் இந்த பணத் தொகை சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் தொகை முழுவதையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு வழங்கவுள்ளது.

போட்டியில் ஒவ்வொரு பவுண்டரிகளுக்கும் 4000 ரூபாயும் ஒவ்வொரு ஆறு மதிப்பெண்களுக்கும் 6000 ரூபாயும் மற்றும் ஒவ்வொரு நிலக்குனு பந்துக்கும் மற்றும் ஒவ்வொரு ஓட்டமற்ற பந்துகளுக்கும் 2000 ரூபாயும் நன்கொடையாக வழங்கப்படும்.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘இதயம் மற்றும் பராமரிப்பு வளாகம்’ கட்டுவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இது அமைக்கப்பட்டவுடன் , பிறவி இதய நோய் (CHD) மற்றும் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்.

மேலும், LPL போட்டிகளில் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ‘லிட்டில் ஹார்ட்ஸ்’ நிதிக்கு இலங்கை கிரிக்கெட் சபை வழங்க உள்ளது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...