வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு பிடியாணை

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே, கல்லோய சிறிதம்ம தேரர், ரத்னகராவே ஜனரதன தேரர் ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இவர்களுக்கு எதிராக நடைபெறும் வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால், இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றில் இருக்கும் வாகன தரிப்பிடத்திற்குள் பலவந்தமாக நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...