ஹாதியா உயர்கல்வி நிறுவனத்துக்கு 41 பேர் தெரிவு! (பெயர் விபரம்)

Date:

குருநாகலை, குரீகொட்டுவையில் இயங்கி வரும் ஹாதியா உயர்கல்வி நிறுவனத்தின் நாலரை வருடக் கற்கை நெறிக்கு இம்முறை 41 பேர் தெரிவாகியுள்ளனர்.

ஜூலை 30 ஆம் திகதி நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து கலந்து கொண்ட விண்ணப்பதாரிகளில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

க.பொ.த.உயர்தரத்தில் கலைப்பிரிவுக்கான பாடநெறிகளையும் ஆலிமா கற்கை நெறியினையும் இந்தக் கல்வி நிறுவனம் ஒருங்கே வழங்கி வருகிறது.

இந்தக் கற்கை நெறியில் நான்கு மொழிகளில் தேர்ச்சி, தொழில் மற்றும் வாழ்க்கைக் கலைப் பயிற்சிகள், இஸ்லாமியக் குடும்ப வழிகாட்டல், ஆன்மீக மற்றும் பண்பாட்டுப் பயிற்சிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஹாதியா உயர்கல்வி நிறுவனத்தில் கற்று உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவிகளில் கணிசமான எண்ணிக்கையினர் வருடா வருடம் பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதோடு தேசிய கல்விக் கல்லூரிகளுக்கும் தெரிவாகி வருகின்றனர்.

தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடநெறிகள் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...