119 பொலிஸ் அவசர பிரிவுக்கு தவறான தகவல்களை வழங்கும் நபர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
நாளாந்தம் வரும் செய்திகளை ஆய்வு செய்யும் போது, பொதுமக்கள் 119 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி தவறான தகவல்கள் அடங்கிய செய்திகளை அனுப்புவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மிகவும் முக்கியமான மற்றும் அவசரமாக செயற்படுத்தப்பட வேண்டிய தொலைபேசி செய்திகளை செயலாக்குவதில் தாமதம் ஏற்படக்கூடும் என பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, இந்த எண்ணை தவறாக பயன்படுத்தாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பவங்கள் குறித்து முன்னுரிமை அளித்து தேவையான தகவல்களை மட்டும் தெரிவிக்க பயன்படுத்த வேண்டும் என காவல்துறை பொதுமக்களுக்கு தெரிவிக்கிறது.