40 வீதத்தால் அதிகரித்த காடழிப்புச் சம்பவங்கள்

Date:

இவ்வாண்டில் தற்போது வரையில் 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் , இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 வீதம் அதிகம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது நிலவும் வறண்ட காலநிலை காரணமாக வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான காடழிப்பை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காடழிப்பு செயற்பாடுகள் மழையைத் தரும் என்ற மூட நம்பிக்கையின் காரணமாக கிராமங்களில் உள்ள சிலர் காடுகளுக்கு தீ வைப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர், பொலிஸார் , தீயணைப்புப் படை மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து காட்டுத் தீயை விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...