5,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

Date:

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களுக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 5,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை  தெரிவித்துள்ளது.

ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில் மொத்தம் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர்  பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் கொடுமை தொடர்பாக 1,296 புகார்களும், கடுமையான காயங்களை ஏற்படுத்துவது தொடர்பாக 163 புகார்களும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் மற்றும் சைபர்ஸ்பேஸ் மிரட்டல் தொடர்பான 110 புகார்களை சிறுவர் அதிகார சபை பெற்றுள்ளது. புகார்களில் 76 பெண் குழந்தைகள் தொடர்பானவை, 31 ஆண் குழந்தைகளுடன் தொடர்புடையவை.

சிறுவர்களை பிச்சையெடுக்க வற்புறுத்துவது தொடர்பாக 196 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாவட்டம் மற்றும் நகர்ப்புற புறநகர் பகுதிகளில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...