5,000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

Date:

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களுக்குள் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான 5,000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை  தெரிவித்துள்ளது.

ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியில் மொத்தம் 5,456 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர்  பாதுகாப்பு அதிகார சபை தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் கொடுமை தொடர்பாக 1,296 புகார்களும், கடுமையான காயங்களை ஏற்படுத்துவது தொடர்பாக 163 புகார்களும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்கள் மற்றும் சைபர்ஸ்பேஸ் மிரட்டல் தொடர்பான 110 புகார்களை சிறுவர் அதிகார சபை பெற்றுள்ளது. புகார்களில் 76 பெண் குழந்தைகள் தொடர்பானவை, 31 ஆண் குழந்தைகளுடன் தொடர்புடையவை.

சிறுவர்களை பிச்சையெடுக்க வற்புறுத்துவது தொடர்பாக 196 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாவட்டம் மற்றும் நகர்ப்புற புறநகர் பகுதிகளில் இருந்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...