அரசாங்க வாகனங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு!

Date:

அரசாங்க அமைச்சுக்களின் திணைக்களங்கள், நிறுவன சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்ள நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் குறித்த தகவல்களை எளிய தொழில்நுட்ப செயல்முறை மூலம் திறைசேரி பெற்றுக்கொள்ளும் வகையில், இதற்காக புதிய கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளில் சகல வாகனங்கள் தொடர்பான தகவல்களையும் உள்ளிடுமாறு அமைச்சு முன்னதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சு முன்னதாக கடந்த 2015 ஆம் ஆண்டு இத்தகைய கணக்கெடுப்பை நடத்தியது. பயன்படுத்தக்கூடிய மற்றும் பயன்படுத்த முடியாத வாகனங்களின் எண்ணிக்கையை துல்லியமாக மதிப்பிடுவதே இந்த கணக்கெடுப்பின் நோக்கமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில், அரசு நிறுவனங்களில் சுமார் 80 ஆயிரம் வாகனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டது.

இந்த முறை மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் பற்றிய தகவல்கள் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு சேகரிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவரத்தன குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...