இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட விண்கலத்துக்கு என்ன நடந்தது? 320 மில்லியன் எங்கே?

Date:

இலங்கையினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சுப்ரீம் சட் விண்கலத்திற்காக செலவு செய்யப்பட்டதாக கூறப்படும் 320 மில்லியன் டொலர் நிதிக்கும் என்ன நடந்தது?அது தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா விண்வெளி பயணத்தில் சந்திராயன் 1, சந்திராயன் 2 மற்றும் சந்திராயன் 3 என்று மூன்று முயற்சிகளை மேற்கொண்டே சந்திரனில் காலடி வைத்துள்ளது. இந்த மூன்று திட்டங்களுக்கும் மொத்தமாக 263 மில்லியன் டொலர்களே செலவாகியுள்ளது.

ஆனால் எமது நாட்டில் 2012 ஆம் ஆண்டில் ‘சுப்ரீம்சட் 1’ திட்டத்திற்காக 320 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு செலவு செய்யப்பட்ட 320 மில்லியன் டொலருக்கும் என்ன நடந்தது என்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை முன்வைக்குமாறு நான் சபை முதல்வரிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வளவு செலவு செய்து சந்திரனுக்கு போகவில்லை. நாட்டை பாதாளத்திற்கே கொண்டு சென்றுள்ளனர் என்றார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...