‘சந்திராயன் -3’ வெற்றிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் பாராட்டு!

Date:

தெற்காசிய நாடான இந்தியாவால் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் “விக்ரம்“ திட்டம் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், இதனை இலங்கை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட  உரையொன்றை  முன்வைத்தார்

இந்தியாவால் அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் “விக்ரம்“ விண்கலம் நிலவின் தென் துருவத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 2 வாரங்களுக்கு இந்த விண்கலம் இங்கு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இது இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான விண்கலமாகும். அத்துடன், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை நிலைநிறுத்தியுள்ள முதல் நாடாகவும் இந்தியா பதிவாகியுள்ளது.

தெற்காசிய நாடாகவுள்ள இந்தியா, இத்தகையதொரு திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளமைக்காக வாழ்த்துவதுடன், இதனை வரவேற்கிறோம். இந்திய அரசாங்கத்துக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை சார்பில் எமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவால் நிலவின் தென்துருவத்துக்கு அனுப்பப்பட்ட ‘சந்திராயன் -3’ இன் ‘விக்ரம் ‘ லேண்டர் மற்றும் ‘பிரக்யான்’ ரோவர் ஆகியவை நேற்று நிலைநிறுத்தப்பட்டதுடன், அவை தற்போது நிலவில் நடைபயணம் செய்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...