சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை: இ.போ.ச தீர்மானம்

Date:

சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

விபத்துகளை தடுப்பதற்கும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கோளோளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பரிசோதனை புத்தகமொன்று அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் சம்பவித்த விபத்துகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை பிரிவு முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இதுவரை பதிவு செய்யப்பட விபத்துகளில் 218 விபத்துகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் இடம்பெற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...