டெங்கு நோய் அதிகரிப்பால் 38 இறப்புகள் பதிவு!

Date:

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளது.

இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 38 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியில் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோயியில் பிரிவு கூறுகிறது.

தொற்றுநோயியல் பிரிவின் படி, ஜூலை 19 வரை, 2023 இல் இதுவரை மொத்தம் 60,136 டெங்க நொயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 12,886 நோயாளர்கள் , மேல் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30,000 நோயார்கள் பதிவாகியுள்ளனர்.

இரு மாகாணங்களையும் ஒப்பிட்டும் பட்சத்தில் இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமான பதிவாகும் எனவும் தொற்றுநோயியில் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், டெங்கு நோய் பரவும் இடங்கள் அதிகமாக காணப்படும் 43 அதிக ஆபத்துள்ள MOH பகுதிகளை தொற்றுநோயியல் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் 3,446 டெங்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களை சுகாதார அமைச்சும் துறைசார் அரச நிறுவனங்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இவ்வாறான பின்புலத்தில் கொழும்பு உட்பட நாட்டின் சில பகுதிகளில் டெங்கு நோய்யான இரத்த பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 

 

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...