தங்கள் கலாசாரத்திற்கு எதிராக இருப்பதாக குவைத் நாட்டில் பார்பி படத்திற்குத் தடை!

Date:

ஓரினச் சேர்க்கை முறையை ஊக்குவிப்பதாக கூறி குவைத் மற்றும் லெபனானில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது பார்பி திரைப்படம்.

கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலாவ விடுவதில் சளைக்காதவர்கள் ஹாலிவுட்காரர்கள். அந்த வகையில், குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான பார்பி பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து பார்பி படத்தை உலாவ விட்டார் பெண் இயக்குநர் கிரெட்டா கெர்விக்.

ஃபேண்டஸி, காமெடியுடன் பெண்ணியம் பேசும் இந்த திரைப்படம், குழந்தைகளை தவிர்த்து பெரும்பாலான தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அந்நியப்பட்டு இருந்தது. அந்த குறையையும் தீர்த்துள்ளது AI தொழில்நுட்பம். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்டோரை பார்பி பாய்களாக உருமாற்றி உள்ள இந்த பேன்மேட் போஸ்டர்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

மற்றொரு புறம், பார்பி திரைப்படம் ஓரின சேர்க்கை முறை மற்றும் பாலின மாற்றங்களை ஊக்குவிப்பதாக கூறி குவைத்தில் தடை விதிப்புக்கு உள்ளாகி உள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், சமூக நெறிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் கூறி, மீண்டும் சென்சர் செய்ய உத்தரவிட்டுள்ளது லெபனான் அரசு.

 

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...