நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை: பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்று இராஜினாமா?

Date:

பாகிஸ்தான் அரசியலுக்கு இன்று மிக முக்கியமான நாள். கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது அரசியல் ஸ்திரத்தனமை தொடர்பான பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் புதன்கிழமை தனது இராஜினாமாவை சமர்ப்பிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்குமாறு அதிபர் ஆரிஃப் அல்விக்கு புதன்கிழமை கடிதம் எழுத உள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.

ஷாபாஸ் ஷெரீப் தனது பதவியை இராஜினாமா செய்தால், இடைக்கால அரசாங்கம் நாட்டின் பொறுப்பை ஏற்கும்.

நாடாளுமன்ற கீழவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமரின் ஆலோசனையை அதிபர் அல்வி ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...