பாராளுமன்றத்தில் பெண் பராமரிப்பு பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!

Date:

பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பராமரிப்புத் துறையில் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தமக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி, குறித்த பெண்களிடம் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை என்று கடிதங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் மேற்பார்வையில் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினால் விசாரணை நடத்தப்படும் என ரோகினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக் குழு 7ஆம் திகதி முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...