நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் ஓரளவு மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் ,மேல் மாகாணத்திலும், இரத்தினபுரி காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்.
அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை
மட்டக்களப்பு – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும்
காலி – சிறிதளவில் மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை
கண்டி – பிரதானமாக சீரான வானிலை
நுவரெலியா – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
இரத்தினபுரி – சிறிதளவில் மழை பெய்யும்
திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை
மன்னார் – பிரதானமாக சீரான வானிலை