பிரபல பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் மோதல்: ஐவர் கைது

Date:

கொழும்பில் உள்ள இரண்டு பிரபல ஆண்கள் பாடசாலைகளுக்கு இடையில் நேற்று மாலை இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரளை வெஸ்லி கல்லூரிக்கும் மருதானை ஸாஹிரா கல்லூரிக்கும் இடையில் நேற்று மாலை வெள்ளவத்தை குரே பூங்காவில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் போது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டில் கலந்து கொண்ட பார்வையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இதனால் மோதல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் வெள்ளவத்தை மற்றும் கிருலப்பனை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...