பெண்ணின் மூளைக்குள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட புழு: மருத்துவ உலகில் இதுவே முதல்முறை!

Date:

வயிற்று வலிக்காக மருத்துவமனைக்கு சென்ற ஒரு பெண்ணின் மூளையிலிருந்து உயிருடன் புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட விடயம் மருத்துவ உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் 64 வயதுடைய பெண்மணி ஒருவர், கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூளைக்குள் உயிருடன் ஒட்டுண்ணி புழு இருந்தது தெரியவந்துள்ளது. மருத்துவ உலகில் இதுபோன்ற ஒரு பிரச்சினை இதற்கு முன் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.

குறித்த பெண்ணுக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்த போதும் என்ன பிரச்சினை என மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. இதையடுத்து தலைப்பகுதியில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்து பார்த்த போது, மூளைக்குள் 8 செ.மீட்டர் நீளத்தில் உயிருடன் ஒரு ஒட்டுண்ணி புழு இருந்தது கண்டறியபட்டுள்ளது.

பெண்ணின் மூளையில் இருந்தது ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற இனத்தை சேர்ந்த லார்வா புழுவாகும்.

மருத்துவ வரலாற்றிலேயே இது ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பெண்ணுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு பற்றிய தகவல் Emerging Infectious Diseases என்ற இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற ஒட்டுண்ணிகள் carpet pythons (மலைப்பாம்புகள்) இரைப்பையில் தான் காணப்படும். இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், மலைப்பாம்பின் கழிவு மூலமாக இந்த ஒட்டுண்ணி புல்வெளியில் வந்து இருக்கலாம். இதன் பின்னர் ஒட்டுண்ணி பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலுக்குள் வாய் வழியாகவோ, அல்லது எதோ ஒரு வகையிலோ சென்று இருக்க வாய்ப்பு உள்ளது” என்றனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...