மத்திய வங்கிக்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த 10 பேர் பிணையில் விடுதலை

Date:

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட 10 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா பிணை வழங்கப்பட்டதுடன் இந்த குழு அரசு கட்டிடங்களுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை பொலிஸாரால் குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை மத்திய வங்கி வளாகத்துக்குள் நேற்று காலை பலர் நுழைய முற்பட்டதையடுத்து, கொழும்பு கோட்டையில் கடும் பதற்றமான சூழல் நிலவியது.

குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோரின் கூட்டு சங்கத்தின் உறுப்பினர்களாக தங்களை அடையாளப்படுத்திய குழு, தங்களின் குத்தகை வசதி பிரச்சினைகள் தொடர்பான சலுகைகளை கோரி வந்திருந்தனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...