மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டவர்களா?: வைத்தியர்கள் விளக்கம்

Date:

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மருத்துவ சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணரான ஆனந்த விஜேவிக்ரம, ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு பல்வேறு சிக்கல்களின் சாத்தியம் மிகக் குறைவு என தெரிவித்துள்ளார்.

அந்த தடுப்பூசிகளை பெறாதவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. தடுப்பூசி பெறாமல் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கே இவ்வாறான பாதிப்புகள் அதிகமாக உள்ளது.

தடுப்பூசியால் நன்மையே தவிர எவ்வித தீமையும் இல்லை. இந்நாட்டில் தடுப்பூசிகளுக்கு எதிரான ஒரு குழுவினர் இவ்வாறான பொய்ப் பிரசாரங்களை செய்து வருகின்றனர்.

அவர்கள் கொரோனா தடுப்பூசி மாத்திரமின்றி அனைத்து தடுப்பூசிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...