மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள் மீது பலகையால் சரமாரி தாக்குதல்!

Date:

தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற இரு ஊழியர்களை  பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.

இது தொடர்பிலான முறைப்பாடொன்றும் தற்போது தலாவ பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (21) கெக்கிராவ தலாவ ஜயகங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்ட தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் இருவர் இந்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க வந்துள்ளனர்.

பின்னர்,  அன்றைய தினம் நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்துவதாக  அந்த வீட்டின் உரிமையாளர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால், மின்சார அதிகார சபையிலிருந்து உரிய உத்தரவு வந்துள்ளதால், மின்வெட்டை கட்டாயம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, குறித்த வீட்டில் மின்சாரத்தை துண்டிக்க முற்பட்ட போது, ​​அதனைக் கேட்காததால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரின் மகன், அருகில் இருந்த நாய் கூரை மீது இருந்த பலகையால் மின்சாரத்தை துண்டிக்க முயன்ற நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

மேலும், அந்த சம்பவத்தின் போது எடுக்கபட்ட காணொளியும் தற்போது பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...