மிலிந்த மொரகொடவின் சேவைக்காலம் முடிவுக்கு வருகின்றது!

Date:

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தனது பதவிக் காலத்தை முடித்துக்கொண்டு ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவியில் இருந்து விலகுவதற்கான தூதுவரின் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த் மொரகொட 29 ஆகஸ்ட் 2021 அன்று இந்தியாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.

மொரகொட அமைச்சரவை அதிகாரங்களைக் கொண்ட உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதுடன், இலங்கையில் அமைச்சரவை அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது உயர்ஸ்தானிகர் இவரே என்பதும் விசேட அம்சமாகும்.

 

 

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...