மீண்டும் அரகலய?: ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கை!

Date:

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றதைப் போன்று பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை ( 08) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில்  உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிலவும் வறட்சி, மின்சார நெருக்கடி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களை முன்னிறுத்தி அரகலய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள சிலர் எதிர்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் வீடுகளை சுற்றி வளைக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான தாக்குதல்களை தடுக்க விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

வறட்சியால் ஏற்பட்ட தண்ணீர் நெருக்கடி மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி வன்முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு சில ஊடக நிறுவனங்களும் பின்னணியில் இருப்பதாக குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...