முதியோர், ஊனமுற்றோர்,சிறுநீரக நோயாளிகளுக்கான மாதாந்த கொடுப்பனவுகள் தொடரும்

Date:

புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகளை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் உட்பட 647,683 பேர் தொடர்ந்தும் கொடுப்பனவைப் பெறுவார்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களில் 41,119 சிறுநீரக நோயாளிகள், 88,602 ஊனமுற்றோர் மற்றும் 517,962 பேர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர்.

எதிர்வரும் நாட்களில் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, முதியோர் கொடுப்பனவுகள் தபால் நிலையங்களில் இருந்தும், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படும்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி மற்றும் மனைவிக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி...

Diamond Excellence Award: அட்டாளைச்சேனை Hakeem Art Work க்கு “கலை. சமூக தாக்கம்” விருது

அட்டாளைச்சேனை-13 இல் செயல்பட்டு வரும் Hakeem Art Work Shop நிறுவனம்,...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத்  தொடர்ந்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேசிய லொத்தர்...