வட்டி வீதம் தொடர்பில் மத்திய வங்கியின் புதிய தீர்மானம்!

Date:

மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே அவற்றின் தற்போதைய 11.00 மற்றும் 12.00 சதவீத மட்டத்தில் பேணுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டம் நேற்று ( 23)  நடைபெற்றது. இந்த குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட பணவியல் கொள்கை தளர்த்தல் நடவடிக்கைகளுக்கு நடைமுறையில் இருக்கும் வீதங்கள் மற்றும் சந்தை வட்டி வீதங்களை விரைவாக சரிசெய்வதற்கு இடமளிக்க வேண்டும். எவ்வாறாயினும், சில கடன் வழங்கும் பொருட்களின் சந்தை வட்டி வீதங்கள் அதிகமாக இருப்பதையும் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு இணங்கவில்லை என்பதையும் மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

மேலும், சமீபத்திய பணவியல் கொள்கை தளர்த்தல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப ஒட்டுமொத்த சந்தைக் கடன் வட்டி வீதங்களில் விரைவான குறைப்பை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...