வறட்சியான பகுதிகளில் குடிநீர் விற்பனை அதிகரிப்பு!

Date:

கடும் வறட்சியான காலநிலையால் குடிநீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், வறண்ட பகுதிகளில் தண்ணீர் விற்பனையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை போன்ற கடுமையான வறண்ட காலநிலை நிலவும் பிரதேசங்களிலேயே நீர் விற்பனை அதிகமாக இடம்பெறுகின்றது.

அந்த இடங்களில் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குடிநீர் விற்கப்படுகிறது.

இங்கு கிணற்று நீர் சுத்திகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குடிநீரை பரிசோதிக்கும் உரிமை பொது சுகாதார பரிசோதகருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குடிநீர் போத்தல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை கூட பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதித்து பொருத்தமான நிலையில் இருந்தால் அனுமதி வழங்குவார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

எவ்வாறாயினும், இந்நாட்களில் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளதால், சிலர் சுத்திகரிக்காமல் தண்ணீரை விற்பனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...