அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Date:

சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைத்துள்ளது.

அனைத்து சதொச நிறுவனங்களிலும் இன்று முதல் அமுலாகும் வகையில் இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவப்பு பருப்பு, பெரிய வெங்காயம், வெள்ளைப்பூண்டு, நெத்தலி, கிழங்கு மற்றும் சோயாமீட் ஆகியவற்றின் விலைகள் இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிவப்பு பருப்பு கிலோ ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டு 299 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு 620 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், நெத்தலியின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும், கிழங்கின் விலை 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், சோயாமீட்டின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்த்துள்ளது.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...