ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் அரசுக்கு அழுத்தம்

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் பூரண பங்கேற்புடனும் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் நேற்று (11) உரையாற்றிய போதே பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இதனைத் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி விசாரணைகளையும் வழக்குகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த உயர்ஸ்தானிகரின் அறிக்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...