A/L எழுதிய மாணவர்களுக்கு பேரா.முஸ்லிம் மஜ்லிஸ் நடத்தும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வழிகாட்டல் நிகழ்வு!

Date:

உயர்தரக் கல்வியை முடித்து மேற்படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகள் மற்றும் எதிர்காலக் கற்கைத் துறைகள் தொடர்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஊக்குவிப்பு அமர்வுகள், அனைத்துத் துறைகளுக்குமான பாடத் தேர்வு வழிகாட்டல்கள், பொதுவான கற்கை நெறி வழிகாட்டல்கள், ஒன்லைன் பதிவுக்கான வழிகாட்டல்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

‘வெற்றியை நோக்கி’ எனும் மகுடத்திலான இந்த நிகழ்ச்சி 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பி.ப.3.00 மணி வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஈஓஈ பெரேரா அரங்கில் நடைபெறும்.

மேலதிக தகவல்களை 0778789782 என்ற இலக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...