ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஐநா மனித உரிமை ஆணையாளர் அரசுக்கு அழுத்தம்

Date:

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் பூரண பங்கேற்புடனும் சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையை ஆரம்பிக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் நேற்று (11) உரையாற்றிய போதே பிரதி உயர்ஸ்தானிகர் நடா அல் நஷிப் இதனைத் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள் மட்டுமன்றி ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின்படி விசாரணைகளையும் வழக்குகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த உயர்ஸ்தானிகரின் அறிக்கை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக அவர் கூறினார்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...