கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு நாட்டிற்கு வருகை!

Date:

கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர்.

இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு அதிகாரிகளை தௌிவுபடுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கப்பல் விபத்து மற்றும் கடலோர குழாய் அமைப்புகளில் காணப்படும் கோளாறுகள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுத்தல், கப்பல் விபத்துகள் ஏற்பட்டால் அதன் பாதிப்பை சரியாக மதிப்பிடுதல் மற்றும் அவ்வாறான பாதிப்புகளுக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்வதற்கான சரியான நடைமுறை ஆகிய செயன்முறைகள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு தௌிவுபடுத்தப்படவுள்ளது.

இந்த தௌிவுபடுத்தலுக்காக இலங்கை துறைமுக அதிகாரசபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், இடர்முகாமைத்துவ நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

போதுமான தொழில்நுட்ப அறிவின்மையால் X-Press Pearl கப்பல் விபத்தின் பின்னர் நாட்டிற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டின் பின்னர் நாட்டின் கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் என கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...