சவூதி அரசாங்கத்தின் அனுசரணையில் காத்தான்குடியில் 500 பேருக்கு கண்சத்திர சிகிச்சை!

Date:

சவூதி அரேபியாவின்  நிதிப்பங்களிப்பில் கண் வெண்படலம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கண் சத்திரசிகிச்சை காத்தான்குடி தளவைத்தியசாலையில் நடைபெற்று வருகின்றது.

இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் (ஜம்இய்யதுஸ் ஸபாப் அமைப்பின்) ஏற்பாட்டில் 2001 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 27வது கண் சத்திரசிகிச்சை முகாம் இம்முறை சவூதி அரசாங்கத்தின் பங்களிப்பில் காத்தான்குடியில் 500 கண் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

சத்திர சிகிச்சை முகாமின் வைபவ ரீதியான ஆரம்ப நிகழ்வு காத்தான்குடி தள வைத்தியசாலையி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஜம்இய்யதுஸ் ஸபாப் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தாசிம், பிரதிப்பணிப்பளர் ஏ.ஜே.எம்.வாரித், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.அமீர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
புனர்வாழ்வு, மனிதநேயப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையத்தின் ஏற்பாட்டில் கண்பார்வைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு “சவூதியின் ஒளி” எனும் தொனிப் பொருளில் சுமார் 1000 கண் நோயாளர்களுக்கு கண் சத்திரசிகிச்சை வழங்கப்படுகின்றது.

இதன் முதற்கட்டமாக இம்மாதம் 7ம் திகதி முதல் 12ம் திகதி வரை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல தளவைத்தியசாலையில் 500 பேருக்கும், இரண்டாங் கட்டமாக 13ம் திகதி தொடக்கம் 17ம் திகதிவரை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, புத்தளம், மாவனல்லை மற்றும் குறுநாகல் பிரதேசங்களைச் சேர்ந்த 500 பேருக்கு காத்தான்குடி தளவைத்தியசாலையிலுமாக இக் கண் சத்திர சிகிச்சை முகாம் இடம்பெற்று வருகின்றது.

ஜம்இய்யதுஸ் ஸபாப் அமைப்பு கடந்த 22 வருடங்களில் மஹரகம, புத்தளம், நிந்தவூர், ஹம்பாந்தோட்டை, காத்தான்குடி ஆகிய இடங்களில் சுமார் 26 ஆயிரம் கண் நோயளர்களுக்கு சத்திர சிகிச்சையினை இலவசமாக வழங்கியுள்ளது.

இக்கண் சத்திரசிகிச்சைகளுக்கான வைத்தியர்குழுவினை சவூதி அரேபிய நாட்டின் தமாம் பிரதேசத்தில் இயங்கிவரும் அல்பசர் சர்வதேச அமைப்பு தொடர்ச்சியாக இலவசமாக வழங்கி வருகின்றது.

இம்முறை காத்தான்குடியில் இடம்பெறும் கண் சத்திர சிகிச்சையினை அல்பசர் சர்வதேச அமைப்பின் நிறைவேற்று அதிகாரி எம்.பகுருதீன் தலைமையிலான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 6 கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட குழு மேற்கொண்டு வருகின்றது.

இந்நிகழ்வில் காத்தான்குடி தளவைத்தியசாலை வைத்திய அதிகாரிகள், சர்வமத தலைவர்கள், ஊர் பிரமுகர்கள், மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் உட்பட அதன் பிரதிநிதிகள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...