நிர்வாண வீடியோ, புகைபடங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோருக்கு தண்டனை என்ன தெரியுமா?

Date:

சமூக வலைத்தளங்களில் நிர்வாணமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான சட்டமூலம் அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்துள்ளார்.

நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை வழங்கக்கூடிய வகையில் எதிர்காலத்தில் சட்டங்கள் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்டங்கள் அடங்கிய வரைவு மசோதா தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் சமர்பித்துள்ளார்.

காதல் உறவுகளின் போது எடுக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, தமது காதல் உறவில் விரிசல் ஏற்பட்டதன் பின்னர், ஏனையோர் அவற்றைப் பார்க்கும்  வகையில், சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, முதன்முறையாக இதுபோன்ற குற்றத்திற்காக பிடிபட்ட ஒருவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்கப்படும்.

இரண்டாவது அல்லது மூன்றாவது முறையாக பிடிப்படும் நபருக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரட்டிப்பாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...