பல்துறை கலைஞர் எஸ்.எஸ்.எம்.ரபீக் மாஸ்டர் கௌரவிக்கப்பட்டார்!

Date:

கலை இலக்கிய துறையில் பல்வேறு விருதுகளை வென்றெடுத்துள்ள புத்தளம் கலைஞர், ஓய்வுபெற்ற ஆசிரியர், கலாவர்ணன் “எஸ்.எஸ்.எம். ரபீக் மாஸ்டர்” தனது ஐந்து புதிய படைப்புகளுக்கு முதலிடங்களை பெற்று சாதித்துள்ளார்.

புத்தளம் பிரதேச இலக்கிய விழாவுக்காக இவர் சமர்ப்பித்த கலை ஆக்கங்களில் பாடலாக்கம்- செய்யுள், முகப்புப் பாடலாக்கம், கவிதையாக்கம், சிறுகதை எழுதுதல், சிறுவர் கதை ஆக்கம் ஆகியவற்றிலேயே இவர் முதலிடங்களை பெற்றுள்ளார்.

இதற்கான பரிசளிப்பு விழா அண்மையில் (27) புத்தளம் பிரதேச செயலக “சுபாஷி” கேட்போர் அரங்கில் நடைபெற்றது.

புத்தளம் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர், கலாசார பிரிவு அதிகாரிகள், மத குருக்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

புத்தளம் பிரதேச காரியாலய கலாசாரப் பிரிவு அலுவலகர் தம்மிகா அவர்கள் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாக நின்று கடமையாற்றினார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...