பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Date:

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் தீர்மானத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விசாரணைக்காக பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மேலும் மேற்படி விசாரணை முடியும் வரை பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது என தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு தேவையான வரியை செலுத்தாமல் தங்க நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியை கொண்டு வந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...