பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்: ஜே.வி.பி அழுத்தம்

Date:

‘செனல் 4’ ஆவணப்படத்தில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் பிரகாரம், அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான, சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க விசாரணைகளை நடத்தி சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மிகத் தெளிவான தகவல்களை முன்வைத்து தாக்குதல் தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெரிவித்துள்ளோம்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் மற்றும் அது நடந்தவிதம் அதிகார பேராசையே என்பது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என்பதை ‘செனல் 4’ வெளியிட்டுள்ள வீடியோ உறுதி செய்கிறது.

உயிர்த்த ஞாயிறு வேட்பாளர் ராஜபக்ஷர்கள் குழுவே, மலட்டு உடைகள், மலட்டு மருத்துவர்கள், மலட்டு உணவுகள் குறித்து போலி பிரசாரங்களை முன்னெடுத்தனர்.

தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, தேசிய பாதுகாப்பை தன்னால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என்று கூறியே ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதாக அறிவித்தார்.

இந்த குழுவுடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானும் தற்போதைய அரச புலனாய்வு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான சுரேஸ் சலேவும் நேரடியான தொடர்புகளை கொண்டிருந்தமை மௌலானா செனல் 4 ஆவணப்படத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.

உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் விசாரணைக்கான பணிப்புகளை மேற்கொள்ள வேண்டும்“ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...